துப்பாக்கிச் சூட்டில் ஆட்டோ சாரதி காயம்

ஹங்வெல்ல, எலமலவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (12) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், முச்சக்கரவண்டிச் சாரதி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிபில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய முச்சக்கரவண்டிச் சாரதியே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர், அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Sat, 06/13/2020 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை