மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

காதல் தோல்வி காரணமென சந்தேகம்

சிலாபம், மாதம்பை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலைய வளவுக்குள் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ். கொடிகாமம் பிரதேசத்திலுள்ள என்.டயஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார். 2020 ஜனவரி யிலேயே மாதம்பை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும் காதல் தொடர்பு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் மரணித்த இடத்துக்கும் இந்த மாணவி வந்து சடலத்தை அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் மாவட்ட குறூப் நிருபர்

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை