படகு கவிழ்ந்ததில் 8 வயதுச் சிறுவன் பலி

உகண, கொனாகொல்ல நவகிரியா வாவியில் படகு கவிழ்ந்ததை தொடர்ந்து, நீரில் மூழ்கி 08 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (13) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாவியில் சிறுவர்கள் சிலர், படகுச் சவாரி செய்துகொண்டிருந்த வேளையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது.

இதில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கியதை தொடர்ந்து ஆபத்தான நிலையில், உகண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளதாக,  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொனாகொல்ல, நவகிரியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் உகண பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Sun, 06/14/2020 - 11:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை