ஆர்பி லைப்சிக் அணி 4-2 என வெற்றி

ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், லீக் போட்டியொன்றில் ஆர்பி லைப்சிக் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

ரைன் எனர்ஜிஸ்டேடியன் விளையாட்டரங்களில் கடந்த (திங்கட்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆர்பி லைப்சிக் அணியும், கோலின் அணியும் மோதிக் கொண்டன.

இதில் ஆர்பி லைப்சிக் அணி சார்பில், பேட்ரிக் ஸ்கிக் 20ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கிறிஸ்டோபர் ன்குன்கு 38ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், டிமோ வெர்னர் 50ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், டேனி ஒல்மோ 57ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

கோலின் அணி சார்பாக, ஜோன் கோர்டோபா 7ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், அந்தோனி மோட்ஸ்டே 55ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின் புள்ளிபட்டியலில், ஆர்பி லைப்சிக் அணி 58 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கோலின் 34 புள்ளிகளுடன் பதினொராவது இடத்திலும் உள்ளன.

Wed, 06/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை