கல்முனை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கிய பௌத்த விகாராதிபதி

அம்பாறை தீகவாபி பௌத்த விகாரை ஊடாக கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தீகவாபி விகாராதிபதி போதிவெல தேரர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார்.

இதேவேளை பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கு முகக்கவசங்களையும் (மாஸ்க்), பால்மா பக்கட்டுக்களையும் வழங்கினார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலம் தொடக்கம் தமது பிரதேச மக்களின் கல்வி, பொருளாதார சமூக செயற்பாடுகளுக்கு இந்த  தேரர்  உதவிசெய்து வருவதாக இங்கு வாழும் மக்கள் தெரிவித்ததுடன் விகாராதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்  

Sat, 05/02/2020 - 09:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை