சுவாமி விபுலானந்தரின் ஜனனதின நிகழ்வு

சுவாமி விபுலானந்தரின் ஜனனதின நிகழ்வு நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டு மாநகர சபையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் தமிழ் பேராசிரியரும் முத்தமிழ் வித்தகருமான சுவாமி விபுலானந்தரின் 128 ஆவது பிறந்த தின நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையினரால் மட்டக்களப்பு  நீரூற்று பூங்காவில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அனுட்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், மாநகர சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார், மாநகர தீயணைப்பு பிரிவின் முகாமையாளர் பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Mon, 05/04/2020 - 14:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை