கொவிட் -19; குணமடைந்த கடற்படையினர் 344ஆக உயர்வு

கொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்ட 12 கடற்படையினர் உட்பட  பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 344ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பன்னிரண்டு கடற்படையினரில் 10 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 02 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று  வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (26) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
 

Wed, 05/27/2020 - 16:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை