மேலும் 12 பேர் உள்ளிட்ட இதுவரை 189 கடற்படையினர் குணமடைவு

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி,  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த  கடற்படையைச் சேர்ந்த 12 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (16) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அதற்கமைய கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 189 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 07 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 03 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 02 பேர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். வைத்தியசாலைகளில் அவர்களுக்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு குணமடைந்த 12 கடற்படையினர் உட்பட,  கொவிட் -19 நோய் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 189 கடற்படையினர் இதுவரை வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளவர்களை, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய  மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Sun, 05/17/2020 - 13:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை