கொழும்பு பங்குச் சந்தை மே 11 முதல் ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை மறுதினம் (11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, குறிப்பிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பாக கொழும்பு பங்குச் சந்தையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, முற்பகல் 10.30 மணி முதல்  11.00 மணி வரை பங்கு பரிவர்த்தனைக்கு முந்தைய அமர்வு இடம்பெறும் என்பதோடு, பங்குச் சந்தை திறந்த பரிவர்த்தனை முற்பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Sat, 05/09/2020 - 13:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை