கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஸ்பெயின்

கொரோனா வைரஸினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சற்று தளர்த்த முடிவு செய்துள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட சில சேவைகளில் உள்ள பணியாளர்களை பணிக்குத் திரும்ப அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளதுடன், ஏனைய பொதுமக்கள் வீடுகளில் இருப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 17,500 பேர் பலியாகியுள்ளனர். ஆயினும் தற்போது புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் குறைந்து வருகின்றது.

ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் 19,900 மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்நிலையிலேயே நாளை முதல் குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்கு தனது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் நாளாந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517  இறப்புகள் பதிவாகியுள்ளன. நேற்றையதினம் (12) 619 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, அந்நாட்டில் புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகின்றது.

அந்நாட்டில் தற்போது 17,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 

Mon, 04/13/2020 - 18:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை