ஏழாலையில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ். ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அருகிலிருந்து இன்று (26) காலை சடலம் மீட்கப்பட்டதாக,  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (82) என்பவரே இவ்வாறு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்.விசேட நிருபர்-மயூரப்பிரியன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் – சுமித்தி தங்கராசா)

Mon, 04/27/2020 - 12:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை