குடும்பத் தகராறு; கொலையில் முடிந்தது

மனைவியின் சகோதரர் கைது

அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ள கொலைச் சம்பவமொன்றில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் இஹலவெவ, ஸ்ரவஸ்திபுர பகுதியிலேயே நேற்று (25) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகராறு நீண்டுகொண்டு சென்றதை தொடர்ந்து கூரிய ஆயுதமொன்றினால் குறித்த நபர் தலையில் தாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதில் படுகாயமடைந்தவர் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேயிடத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணித்தவரின் மனைவியின் இளைய சகோதரர் இக்கொலையை புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குடும்பத்  தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை இன்று (26) அநுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Sun, 04/26/2020 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை