சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற தகராறின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 26 வயதுடைய சந்தேகநபரை நேற்று (21) கைது செய்துள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 09 ரவைகளுடன் கூடிய ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தின்போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேகநபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரை இன்று (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
(பாறுக் ஷிஹான்)
from tkn