கடும் காற்றுடன் மழை; நோர்வூட் தமிழ் வித்தியாலய கட்டடமொன்றுக்குச் சேதம்

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக நோர்வூட் தமிழ் வித்தியாலத்தின் வகுப்பறை ஒன்றின் கூறை தகடுகள்  அள்ளுண்டு சென்றமையால் பாடசாலை கட்டடமொன்று முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (15) மாலை இடம்பெற்றுள்ளது. முதலாம் தரம் அமைந்துள்ள கட்டடமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதோடு வித்தியாலயத்தின் காரியாலயத்தில் உள்ள ஆவணங்கள் சில நீரில் நனைந்து  சேதமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் வீடு ஒன்றின் மீது மரமொன்றும் முறிந்து விழுந்தமையால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சேத விபரங்களை பிரதேச கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஹட்டன் கல்வி வலயம் அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)

Fri, 04/17/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை