கல்கமுவ, மொரவெவ பகுதிகளில் இருவர் கொலை

கல்கமுவ, மொரவெவ ஆகிய பகுதிகளில் இரு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு, இக்கொலைச் சம்பவங்கள்  தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ இஹலகம பகுதியிலும் மொரவெவ பன்குலம பகுதியிலும் நேற்று (09) இக்கொலைச்  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்கமுவ, இஹலகம பகுதியில் காணி தொடர்பாக  ஏற்பட்ட  வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இரும்பினால் தாக்கப்பட்ட குறித்த பெண், குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் இஹலகம பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மொரவெவ, பன்குலம பகுதியில் ஆண் ஒருவர் பெண்ணொருவரினால் பொல்லினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பன்குலம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Fri, 04/10/2020 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை