13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தணமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஏ. ரணவீர உள்ளிட்ட ஐந்து பேர் நேற்றுமுன்தினம் (08) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்மொணராகலை, செவணகலை, கிரிவெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியை மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது ட்விற்றரில் சம்பவம் குறித்து தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையிடும் இடம்பெறாது என்று உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து. குறித்த பிரதேச சபை உறுப்பினர், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் அவர் இடைநிறுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் மிக விரைவானதும் பக்கச் சார்பின்றிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பசில் ராஜபக்ஷ அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
from tkn