வவுனியாவில் இரத்த மாதிரிகள் சேகரிப்பு

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால் நேற்று (08) முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் மற்றும் வேறு பகுதிகளில் தொடர்புகளை கொண்டிருந்த வவுனியாவை சேர்ந்தவர்களிற்கு கொரோனா வைரஸ் இருக்கின்றதா என பரிசோதனை செய்வதற்கான இரத்த மாதிரிகள் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவின் குழுமாட்டுசந்தி பகுதி மற்றும் ஓமந்தை, புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள சந்தேகத்திற்கிடமானவர்களிடமே குறித்த இரத்த மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அவை மேலதிக பரிசோதனைக்காக யாழ் பல்கலைகழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வவுனியா நிருபர்

Thu, 04/09/2020 - 06:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை