முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நேற்றுக் காலை சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் தாராபுரம் பகுதியில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்துகொண்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து மன்னார் தாராபுரம் கிராமம் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மரணச் சடங்கில் கலந்துகொண்ட காதர் மஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா விசேட நிருபர்
Thu, 04/09/2020 - 06:42
from tkn