நாளை மறுதினம் முதல் விநியோகம்
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் நாளையதினம் (21) தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தபால் விநியோகம் நாளை மறுதினம் (22) முதல் முன்னெடுக்கப்படுமென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சாதாரண போக்குவரத்து நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை தபால் பொதிச் சேவைகளில் தாமதம் ஏற்படுமென்பதோடு, விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடம்பெறாமை காரணமாக, மேலதிக அறிவிப்புக் கிடைக்கும் வரை வெளிநாட்டு தபால் பொதிகள் தபால் நிலையங்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதெனவும், தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Mon, 04/20/2020 - 11:13
from tkn