வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க திட்டம்

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது

‘வற்’வரி செலுத்துகை தொடர்பாக பெப்ரவரி மாதம் நிறுவனங்கள் சேகரித்த தொகையை மார்ச் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் மார்ச் 20 ஆம் திகதிக்குள் வற் வரியை செலுத்த வேண்டுமென முன்னர் அறிலிக்கப்பட்டாலும்ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மார்ச் 20 ஆம் திகதிக்கு பதிலாக ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கட்டணம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே தெரிவித்தார்.

இருப்பினும், நிறுவனம் தொடர்பான விபரங்களை கணக்கிட அதிகாரிகளுக்கு சிறிது நேரகால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் வங்கிகளுக்கு செல்லாது வீட்டிலிருந்தே ஒன்லைன் மூலம் தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மாற்ற முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே மேலும் கூறினார்.

Mon, 04/20/2020 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை