இரு பிள்ளைகளை கிணற்றில் வீசிய தந்தைக்கு வி.மறியல்

தனது இரு பிள்ளைகளையும் கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தையை எதிர்வரும் 14  நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம். முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் 10, 07  வயதுகளையுடைய பிள்ளைகள் இருவர், நேற்று (14) அதிகாலை அவர்களின் தந்தையினால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த தந்தை (46)  வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம். முஹமட் பஸீலின் உத்தரவிற்கமைய, இரண்டு பிள்ளைகளின் சடலங்கள்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரிக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி விசேட விடுமுறையில் உள்ள நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Wed, 04/15/2020 - 15:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை