மாணவர்களை அழைத்துவர மும்பாய்க்கு விசேட விமானம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்ப முடியாமல், அந்நாட்டில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 166 பேரை அழைத்து வருவதற்காக, இன்று (25) காலை ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள், இந்தியாவில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றிருந்ததோடு, கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவி வரும் நிலையில், அவர்கள் இலங்கைக்கு வர முடியாமல், இந்தியாவில் அகப்பட்டுள்ளனர்.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இலங்கை விமான சேவையான UL 143 எனும் இலக்கம் கொண்ட விமானம் இன்று காலை 9.10 மணிக்கு இந்தியாவின் மும்பாய் நோக்கி புறப்பட்டது.

குறித்த விமானத்தில் இந்தியாவிற்கு பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதோடு, அவ்விமானத்தில் விமானிகள் இருவர் உள்ளிட்ட குழுவினர் பயணித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.55 மணியளவில் குறித்த விமானம், மாணவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. 

Sat, 04/25/2020 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை