சர்வதேச கிருமி நீக்க விதிமுறைகளுக்கு அமைய கிருமி நீக்கம்
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இனந்தெரியாத ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (08) கல்கிஸ்ஸை சேரம் வீதியிலுள்ள, உணவகம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்திலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதோடு, மரணித்தவர் யார் என்பது தொடர்பில் இது வரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கல்கிஸ்ஸை நீதவானின் உத்தரவுக்கமைய, சர்வதேச கிருமி நீக்க விதிமுறைகளுக்கு அமைய சடலத்தைச் சுற்றிய பகுதியில் கிருமீ நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சடலம், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
from tkn