ஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி

கடந்த 24  மணித்தியால காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொவிட் -19 தொற்று உலகளாவிய ரீதியில் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை, 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளமை இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் குறித்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,406ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 277,467ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது வரையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 59,193 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 10, 99,572 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Sat, 04/04/2020 - 13:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை