குமுழமுனையில் இளைஞர் அடித்துக் கொலை

முல்லைத்தீவு, குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் (02) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குமுழமுனை பகுதியிலுள்ள குறித்த இளைஞரது வீட்டுக்கு, அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்து இருக்கின்றார்

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன்  வாக்குவாதப்பட்டுள்ளனர்.  வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு(03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவத்தில்  குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச்  செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறியக் கூடியதாக இருக்கின்றது

(மாங்குளம் குறூப் நிருபர்)

Sat, 04/04/2020 - 12:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை