ஊரடங்கை மீறிய 12,465 பேர் கைதாகினர்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 12,465 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,100 வாகனங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (04) நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய இன்று காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 242 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 83 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Sat, 04/04/2020 - 14:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை