குண்டு சத்தத்திற்கு சிரிக்கும் சிறுமி துருக்கியை அடைந்தார்

சிரியாவில் குண்டு சத்தத்திற்கு சிரிக்க பழகிய மூன்று வயது சிறுமி பாதுகாப்பாக துருக்கியை அடைந்துள்ளார்.

சல்மா என்ற அந்த சிறுமி குண்டு சத்தங்களுக்கு சிரிக்கும் வீடியோ கடந்த மாதம் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது. இத்லிப்பில் தனது வீட்டுக்கு அருகில் குண்டு வீசப்படும்போதும் அந்த சிறுமி விளையாடுவதை அந்த வீடியோ பதிவுசெய்திருந்தது.

இந்நிலையில் அந்த சிறுமி மற்றும் அவளது பெற்றோர்களை பாதுகாப்பாக எல்லையை கடப்பதற்கு துருக்கி அரசாங்கம் உதவியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியாக இத்லிப் உள்ளது.

குண்டு சத்தத்தின் பயத்தை போக்கவே சல்மாவின் தந்தை அப்துல்லாஹ் முஹமது அவருக்கு சிரிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார். உலகிற்கு செய்தி ஒன்றை வழங்கவே அந்த வீடியோவை தாம் பதிவிட்டதாக அப்துல்லாஹ் துருக்கி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை