பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்கு நுழையத் தடை

பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்கு நுழையத் தடை-Passenger Flights and Ships Banned Until COVID19 Controlled

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் இத்தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Sun, 03/22/2020 - 12:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை