குளவி கொட்டுக்கு இலக்காகிய சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள்

சிவனொளிபாதமலையை தரிசிக்க வந்த 12 யாத்திரிகர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்ல தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் ராகம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் நீராடுவதற்காக சென்ற வேளையிலேயே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூன்று குழந்தைகளுடன், மூன்று முதியோர் அடங்கலாக 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்ததாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய தெரிவித்தார்.

மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை