ரவியின் மனுக்களை பரிசீலிக்க மூவர் கொண்ட குழு

மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமனம் சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளாகக் கூறப்பட்டு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட நால்வர்  தாக்கல் செய்த ரீட் மனுக்களை பரிசீலிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், மத்திய வங்கியின் அதிகாரிகளில் ஒருவரான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரின் சட்ட ஆலோசகரான சமன்குமார ஆகியோர் நேற்றுமுன்தினம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி நடைபெற்ற விசாரணையின்போது சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரா, மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ரீட் மனுக்களை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக அறிவித்தது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை