வென்டேஜ் எப்.ஏ கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டிகள் இன்று

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வென்டேஜ் எப்.ஏ. கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் கொழும்பு குதிரைப் பந்தய அரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

முன்னாள் சம்பியன்களான சோண்டர்ஸ் கழகமும் புளூ ஈகள் கழகமும் மோதும் முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இப் போட்டி முடிவடைந்ததும் மாலை 6.30 மணிக்கு களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை முன்னாள் சம்பியன் பொலிஸ் கழகம் மின்னொளியில் எதிர்த்தாடும்.

இலங்கை கால்பந்தாட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்த கழகங்களில் ஒன்றான சோண்டர்ஸ் கழகத்துக்கும் புளூ ஈகள் கழகத்துக்கும் இடையிலான போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையுவுள்ளது.

இரண்டு அணிகளிலும் முன்னாள் தேசிய வீரர்களும் இந்நாள் தேசிய வீரர்களும் இடம்பெறுகின்றமையால் கடும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எப்.ஏ. கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக சம்பியனாகத் துடிக்கும் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் முன்னாள் சம்பியன் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான இரண்டாவது அரை இறுதிப் போட்டியும் விறுவிறுப்பை தரக்கூடியதாகும்.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை