பொத்துவிலில் சமூக சேவையாளர்களுக்கு விருது

பொத்துவில் பிரதேசத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர்களானஏ.எம்.நஸ்றுதீன் மற்றும் எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோர் தேசிய காங்கிரசின் பொத்துவில் மத்திய குழுவினால் ”உயர்ந்த மண் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

”உயர்ந்த மண் விருது” வழங்கும் விழா தேசிய காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் சனிக்கிழமை (08) அறுகம்பே புளுவெவே ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.ஜமாஹிம், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.முபாரக், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ​ெடாக்டர் வை.எஸ்.எம்.சியா, முனை மருதவன் எம்.எச்.எம்.இப்றாகீம் மற்றும் கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக சேவையாளர்கள், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

(பாலமுனை விசேட நிருபர்)

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை