விபத்தில் நால்வர் பலி

திகன – மெனிக்ஹின்ன வீதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மெனிக்ஹின்ன பகுதி நோக்கிப் பயணித்த கெப் வாகனமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. சாரதியால் வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால், வீதியை விட்டு விலகிச் சென்று கற்குவியல் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் குறித்த வாகனச் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்ததை தொடர்ந்து மெனிக்ஹின்ன வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

17, 19 வயதுகளையுடைய திருகோணமலை, உஹன மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் மெனிக்ஹின்ன பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Sat, 02/08/2020 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை