அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் விடைகொடுக்க ஹர்பஜன் திட்டம்

இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்தாண்டின் ஐ.பி.எல் தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1998ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன், 2011ஆம் ஆண்டு வரையிலும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருக்கான வாய்ப்புகள் குறையவே இறுதியாக, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண டி20 தொடரில் இந்திய அணிக்காக ஹர்பஜன் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், சென்னை அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அவர் நடப்பாண்டு தொடருடன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mon, 02/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை