லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜேவர்தனவின் 134ஆவது ஜனன தினத்தையொட்டி இன்று (20)இரவு முழுவதும் பிரித் பாராயணம் நடைபெறும். இதனையொட்டி நாளையும் நாளை மறுதினமும் விசேட மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், 22ஆம் திகதி மஹா சங்கத்தினருக்கு தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. லேக்ஹவுஸ் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வுகளில் லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர், பணிப்பாளர்கள் மற்றும் லேக்ஹவுஸ் ஊழியர்கள் கலந்துகொள்வர்.
Thu, 02/20/2020 - 11:35
from tkn