ஸ்பெயினில் இரசாயன ஆலை வெடித்து ஒருவர் உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள இரசாயன ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 8 பேர் காயமுற்றனர்.

டராகோனா பகுதியில் கடந்த செவ்வாயன்று இந்த சம்பவம் இடம்பெற்றது. பல்வேறு இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படும் அந்த ஆலையில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு தீ மூண்டது.

இதனால் மேலும் ஒரு ஊழியரைக் காணவில்லை.

ஆலையில் வெடிப்புச் சம்பவம் எப்படி நேர்ந்தது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் நேர்ந்த போது அருகில், நச்சு இரசாயனங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை