பாக், ஆப்கானில் 110 பேர் உயிரிழப்பு

பனிச்சரிவு, வெள்ளம், கடுங்குளிர் என மோசமான வானிலை காரணமாகக் கடந்த சில நாட்களில் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. கடுமையான பனிச்சரிவு காரணமாக பொதுமக்கள் தனியாக சிக்கிக் கொள்வதாகவும் அதனால் அவர்களை மீட்பது கடினமாய் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் குறைந்தது 75 பேர் உயிரிழந்ததாகவும், 64 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதி பனியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 55 பேர் உயிரிழந்திருப்பதோடு 10 பேரைக் காணவில்லை. ஆப்கானிஸ்தானில் 39 பேர் உயிரிழந்தனர். வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை