மனைவி பலி; சந்தேகநபரும், யுவதியும் வைத்தியசாலையில்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின் உறவினரானயுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை (25) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்வத்தின் போது சுகந்தன் சகுந்தலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிழிந்துள்ளதோடு,அவரின் உறவினரான அண்மையில் அரச நியமனம் பெற்ற பட்டதாரி யுவதி காயமடைந்துள்ளார்.
அத்தோடு குறித்த நபர் தன்னை தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்யத நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கனவன் மனைவி நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமாகிய நிலையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், கனவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
பிமந்தனாறு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் அவரது மனைவி வசித்து வந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை குறித்த வீட்டுக்குள் புகுந்து மனைவியை வெட்டி படு கொலை செய்து தானும் தனது கழுததை வெட்டி தற்கொலை தற்கொலை முயற்சித்த நிலையில், கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும். சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன், கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)
from tkn