சீறிப் பாயும் காளைகளும் காளையர்களும்!

பலத்த சர்ச்சைக்கு மத்தியில் தீவிர பாதுகாப்புடன் தொடங்கியது ஜல்லிக்கட்டு

தமிழர் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற அதேவேளை

ஜல்லிக்கட்டும் களைகட்டியுள்ளது. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியுடன், மாபெரும் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பாரம்பரிய இடமான மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி மாபெரும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் கண்காணிப்பில் நடந்தது. இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு தயாராக நின்றனர். 5க்கும் ஏற்பட்ட அம்புலன்ஸ்கள் அங்கு நின்றன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளைப் பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம் காட்டினர். தமிழக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார். அவனியாபுரம்- திருமங்கலம் வீதியில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் தமிழகம் வந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்தில் மக்கள் குவிந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காளைகளைப் பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75 காளையர்கள் களமிறக்கப்படுகின்றனர். வெற்றி பெறும் காளைகள், வீரர்களுக்கு வழங்க ஏராளமான பரிசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காளைகளால் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை