சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி தொடர்ந்தும் நடைமுறையில்

அரசியல் பேதங்களுக்கு அப்பால் மாணவர்களின் நலன்கருதி சுரக்‌ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறுகிய அரசியல் நோக்கத்திற்கப்பால் இதனை மதிப்பீடு செய்வதுடன் அதில் பிரச்சினைகள் முறைகேடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்

அனைத்து அரசாங்க பிரிவெனாக்கள், தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் நன்மை கிடைக்கக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத்திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை கல்வியமைச்சின் பாடசாலை சுகாதாரம் மற்றும் போஷாக்கு சபையுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். சுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க 011 2784 163 மற்றும் 011 2784 872 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என கல்விமைச்சு தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/10/2020 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை