தாய்வான் மலைப்பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்க முயன்றபோது இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெனரல் ஷென் யி மிங் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் தைபேவுக்கு அருகில் பிளக் ஹோக் ஹெலிகொப்டர் நேற்று விபத்துக்குள்ளாகும்போது அதில் 12 பேர் இருந்துள்ளனர். இதில் சிலர் உயிர்தப்பி இருப்பதாகவும் மேலும் பலர் ஹெலி சிதைவுகளில் சிக்கி இருப்பதாகவும் ஆரம்பக் கட்ட செய்திகள் வெளியாகின.
தாய்வானின் வடகிழக்கில் உள்ள இராணுவத் தளம் ஒன்றை நோக்கி அந்த ஹெலி பயணித்துக்கொண்டிருந்தது. இராணுவத் தளபதியுடன் மேலும் பல முக்கிய இராணுவ அதிகாரிகளும் அந்த ஹெலிகொப்டரில் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 80 படையினருடன் விபத்து இடம்பெற்ற பகுதியில் மேலும் இரு பிளக் ஹோக் ஹெலிகொப்டர்களை தாய்வான் விமானப்படை அனுப்பியுள்ளது.
from tkn