திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி

ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி மார்ச் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாக கவுன்சில் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, திட்டமிட்டபடி வரும் மே 24ஆம் திகதி ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறுமென்றும், ஒரே நாளில் இரு போட்டிகள் என்பது 5 நாட்கள் மட்டுமே இந்த முறை நடைபெறும் என்றும் கூறினார்.

இதன்படி வரும் மார்ச் 29ஆம் திகதி முதல் ஐ.பி.எல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 12 வரை லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் தகுதிச் சுற்றுப் போட்டி மே 14ஆம் திகதி கொல்கத்தாவிலும், அதனைத் தொடர்ந்து வெளியேற்றுதல் சுற்றுப் போட்டி மே 15ஆம் திகதி பெங்களுரிலும், இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி மே 16ஆம் திகதி சென்னையிலும், இறுதிப் போட்டி மும்பையிலும் நடைபெறவுள்ளது.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை