பெடரர் போராடி வெற்றி

மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஏழு மெட்ச் பொயிண்ட்களிலிருந்து தப்பித்து போராடி வென்றுள்ளார் முன்னணி வீரர் ரொஜர் பெடரர்.

காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரெனை எதிர்கொண்ட பெடரர் முதல் மூன்று செட்களில் 2இல் வென்று பின்னடைவை சந்தித்தார். அடுத்த செட் டை பிரேக்கருக்குச் சென்றது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

எனினும் கடைசி இரு செட்களைப் போராடி வென்று, ஏழு மெட்ச் பொயிண்ட்களிலிருந்து தப்பித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் பெடரர். இந்த ஆட்டம் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. காயம் காரணமாக பெடரர் ஆட்டத்தின்போது அவதிப்பட்டார். எனினும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார்.

நான் இன்று மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என்று போட்டிக்குப் பின்னர் பெடரர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி சுற்றில் ரொஜர் பெடரர் 15ஆவது முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை