5 கஜமுத்துக்களுடன் 07 சந்தேக நபர்கள் கைது

பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களுடன் 7 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இவர்கள் கைதாகினர்.

கைதான நபர்களிடம் இருந்து டொல்பின் ரக வான், 7 கைத்தொலைபேசிகள்,5 கஜமுத்துக்கள் என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் சுமார் 25 முதல் 43 வயது உடையவர்கள் எனவும் இவர்கள் கந்தளாய், கிண்ணியா பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கைதான 7 சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஒலுவில் விசேட நிருபர்

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை