நீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு

நீர்கொழும்பு, கட்டுநாயக்க பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு-24 hour water cut at Negombo and Katunayake area

நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (06) 24 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்பிறப்பாக்கி  நிறுவப்படவுள்ளதால், நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (06) காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை (07) காலை 9.00 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,  கொச்சிக்கடை, தூவ, பிட்டிபன, துன்கல்பிட்டிய, பாசியாவத்த, பமுணுகம, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயம், கட்டுநாயக்க விமானப்படை முகாம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுப்புறம் உள்ளிட்ட கட்டான பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தமக்கு அவசியமான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு சபை அறிவுறுத்தியுள்ளது.

Sun, 01/05/2020 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை