மட்டக்களப்பு சிறைச்சாலைக் கைதிகள் கூரை மேல் ஏறிப் போராட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 30க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதைத் தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கூரைமேலே ஏறி போராட்டம் நடாத்தும் கைதிகளிலில் அதிகமானவர்கள் போதைப் பொருட் கடத்தலுடன் சம்பந்தப்பட்வர்கள் எனத் தெரியவருகிறது.

கைதிகளின் குறித்த போராட்டம் காரணமாக சிறைச்சாலையைச் சுற்றி பெருமளவு பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை முன் வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளது.

ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்

Sun, 01/05/2020 - 15:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை