குளவிக் கொட்டினால் 10 பேர் பாதிப்பு

பொகவந்தலாவ - கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டினால் 10 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 11.45மணி அளவில் இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையின் கற்குகை ஒன்றிலிருந்த குளவிகள் கலைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. குளவி கொட்டுக்கு உள்ளான தொழிலாளர்கள் பத்து பேரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை