நியூசி. எரிமலை வெடிப்பு: உயிரிழந்தோருக்கு மெளன அஞ்சலி

நியூசிலாந்தில் வெள்ளைத் தீவு எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோருக்காக நேற்று ஒரு நிமிட மெளன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

எரிமலை வெடிப்பில் இதுவரை 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவரின் சடலங்கள் இன்னும் தேடப்பட்டு வருகின்றன.

கடலில் இருப்பதாக நம்பப்படும் அந்தச் சடலங்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இருப்பினும், எரிமலைச் சாம்பல் காரணமாக நீர் மங்கலாக இருப்பதால் தேடும் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

எரிமலை வெடித்தபோது வெள்ளைத் தீவில் 47 பேர் இருந்தனர். உள்ளூர்வாசிகளும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, பிரிட்டன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் அவர்களில் அடங்குவர்.

தீக்காயங்களுக்காக குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை