முதற் தர கழகங்களுக்கிடையிலான டயலொக் கிண்ண றகர் போட்டித் தொடரில் பிரபல கண்டி அணி 34 - 13என்ற புள்ளி வித்தியாசத்தில் இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது. பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கண்டி அணி 5ட்ரை 3கொன்வேசன் 1பெனல்டி மூலம் 34புள்ளிளைப் பெற்றது. இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணி 2ட்ரை 1பெனல்டி மூலம் 13புள்ளிளைப் பெற்றது.
கண்டி அணி சார்பாக தினுஸ்க டங்கே 2ட்ரைகளையும் மற்றும் லசித அத்தனாகொட, புத்திம பியரத்ன, லவங்க பெரேரா ஆகியோர் தலா 1ட்ரை வீதமும் பெற்றனர். தரிந்த ரத்வத்த 3கொண்வேசன் 1பெனல்டி என்பவற்றைப் பெற்று கண்டி அணி மொத்தம் 34புள்ளிகளைப் பெற்றது. இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணி சார்பாக ரசித் சில்வா, கசுன் சுரங்க, ஆகியோர் தலா 1ட்ரை வீதமும் யொகான் பெரேரா 1பெனல்டி மூலமும் மொத்தம் 13புள்ளிகளைப் பெற்றனர்.
அக்குறணை குறூப் நிருபர்
from tkn