கடந்த அரசாங்கம் 6000 பேருக்கு போலி நியமனம்

கடந்த அரசாங்கத்தில் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடத்திற்கு மேல் நீடிக்கவுள்ளது என முன்னாள் பிரதியமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி பணிகள், வேலைவாய்ப்புகள் என்பன அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தலுக்கு பின்புதான் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த அரசாங்கத்தில் ரணிலினால் 1300 பேருக்கு இரண்டாம் மொழி ஆசிரியருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் 6 ஆயிரம் பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் எந்தவித அமைச்சரவையினதும் மற்றும் நிதியமைச்சின் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் ஏமாறப்பட்டுள்ளார்கள். அவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனையும் எமது புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கே சரி செய்ய வேண்டியுள்ளது. தமிழ் பேசும் மக்கள் இனியாவது நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும். கடந்த 5 வருட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஏதுவும் கிடைக்கவேயில்லை.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை